பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தற்கொலை.. குற்றவாளி சரண்!

Default Image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமி, விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கவரப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக புதுக்கோட்டை மாவட்டம், பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவர், ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது அந்த பெண்ணின் வீட்டில் ராம்கியுடன் திருமணம் செய்து வைப்பதாக முடுவெடுத்தனர். ஆனால், கர்ப்பமடைந்த அந்த சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என ராம்கியின் பெற்றோர் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமியின் பெற்றோரிடம் தரக்குறைவாக பேசினார்கள்.

இதனால் அந்த சிறுமி, தனது பெற்றோர்களுடன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராம்கி என்ற இளைஞரை மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் மீது புகாரளித்தார். புகாரின் பேரில், போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புகாரளித்து நீண்ட காலங்கள் ஆகியும், ராம்கியை கைது செய்யாத காரணத்தினால், அந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சி செய்த அந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவர், மணப்பாறை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்