முதலமைச்சர் பழனிசாமி கோவையில் 17 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். கோவையில் கனமழையின் காரணமாக ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர் இன்று அதிகாலை சாய்ந்தது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17- பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 17 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…