பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 -இல் தொடக்கம். அடுத்த ஆண்டு முதல் ஆன்-லைனில் கவுன்சீலிங்

Published by
Castro Murugan
சென்னை : பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கும் என தமிழக  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழக்கமாக எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர்தான்  பொறியியல் மாணவர் கலந்தாய்வு நடைபெறும். அதன்படி 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூன் 21 -ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது.
ஆனால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாலும், எம்பிபிஎஸ் உள் ஒதுக்கீடு வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தாலும் பி.இ. கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே மருத்துவ சேர்க்கை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வரும் திங்கள்கிழமை முதல் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வைத் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , நீட் தேர்வு முடிவு வெளிவந்த பிறகு, அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால், எம்பிபிஎஸ்  கலந்தாய்வு தொடங்குவது தாமதப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பி.இ. கலந்தாய்வைத் தொடங்குவது மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
.
இதனால் ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வை வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 18 ஆம் தேதி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி பிளஸ் 2 தொழில் கல்வி பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெறும்
மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு -ஜூலை 19
விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு -ஜூலை 19, 20
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு -ஜூலை 21
பொதுப் பிரிவு கலந்தாய்வு -ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 11 வரை.
துணைக் கலந்தாய்வுக்கான பதிவு – ஆகஸ்ட் 16
பி.இ. துணைக் கலந்தாய்வு – ஆகஸ்ட் 17
அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டு காலி இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை கலந்தாய்வு -ஆகஸ்ட்18 தேதி நடைபெறும் என தெரிவித்தார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2018-19 கல்வியாண்டு முதல் ஆன்-லைன் கலந்தாய்வு முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும்  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழன் கூறினார்.
Published by
Castro Murugan

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

10 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

14 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

15 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

15 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

15 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

16 hours ago