16 வயது சிறுமிக்கு அண்ணன் செய்த கொடுமை!மருத்துவமனையில் பெற்றோருக்கு தெரியவந்த உண்மை!

Default Image
  • 16 வயது சிறுமிக்கு அண்ணனே செய்த கொடுமை.மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த உண்மை.
  • விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர்.

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முர்ஷித் ஆவார்.இவர் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.பெரியப்பாவிற்கு 16 வயது மதிப்புள்ள சிறுமி உள்ளார்.

இவர் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமி உறவு முறையில் முர்ஷித்திற்கு சகோதரி ஆவார்.இந்நிலையில் முர்ஷித் அடிக்கடி பெரியப்பா வீட்டிற்கு வரும் போது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

மேலும் இங்கு நடந்தவற்றை வெளியில் யாரிடமும் சொல்ல கூடாது என்றும் மீறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.இதனால் மிகவும் பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சிறுமிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது முர்ஷித் தன்னிடம் தகாத உறவு கொண்டதாக கூறி அழுதுள்ளார்.

இதனை தொடர்ந்து செய்வதறியாது திகைத்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முர்ஷித்தை கைது செய்துள்ளனர்.

மேலும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முர்ஷித்திடம் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்