சென்னை அண்ணாநகரை சேர்ந்த 16 வயது இளம்பெண் இணையத்தில் சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசி வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆரம்பத்தில் பேசிய அந்த வாலிபர் போகப்போக சற்று ஆபாசமாக பேசியுள்ளார். உடனே சிறுமி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
ஆனால் அந்த வாலிபரும் வேறொரு இன்ஸ்டாகிராம் முகவரியிலிருந்து ஒரு பெண்ணின் பெயரில் அந்த அந்த சிறுமியுடன் மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அச்சிறுமியும் வேறொரு பெண் போல என நினைத்து அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார். இருவரும்
வீடியோ கால் செய்யும் அளவிற்கு இணையத்தில் பேசியுள்ளனர். அப்போது வீடியோ காலிங் மூலம் அந்த சிறுமி குளிக்கும் போது எடுக்கப்பட்ட அரை நிர்வாண வீடியோவை அந்த வாலிபன் தனது போனில் சேகரித்து வைத்து விட்டான்.
அந்த அரை நிர்வாண வீடியோவை அந்த பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அந்த வாலிபன் அனுப்பியுள்ளான். தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என அந்த வாலிபன் மிரட்ட உடனே அச்சிறுமி பதறி போனார். சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அச்சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்து விட்டார். அந்த வாலிபரை தற்போது போலீஸார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து உள்ளனர்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…