பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை!

Published by
Rebekal
தாரமங்கலம் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாரமங்கலம் அருகே 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விசாரித்த போலீசார் ஏற்கனவே இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் அம்பேத்கர் நகரில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் வயிற்று வலி காரணமாக பெற்றோர்கள் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து பார்த்த பொழுது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 11ஆம் தேதி சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் சிறுமி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர்களான 2 வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனாலேயே சிறுமி கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றதும் தற்பொழுது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் ஆகிய சரண்குமார், சண்முகராஜா ஆகிய இருவரிடம் தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அச்சிறுமி வசித்து வரக்கூடிய வீட்டருகே உள்ள மக்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

ஆளுநர் விவகாரம்: ‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு’ – முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!

ஆளுநர் விவகாரம்: ‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு’ – முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!

சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…

12 minutes ago

சமையல் கியாஸ் விலையேற்றத்தை அரசு திரும்ப பெற வேண்டும்! விஜய் கண்டன அறிக்கை!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…

34 minutes ago

தமிழக ஆளுநரின் செயல்பாடு சட்டப்படி தவறானது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

2 hours ago

தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! விரைவில் சிங்கப்பூர் பயணம்..,

அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…

2 hours ago

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

3 hours ago

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago