144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்காதது எந்த வகையில் நியாயம்?

Default Image

144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்காதது எந்த வகையில் நியாயம்? என்றும்  ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது  என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தென்காசி அருகே செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலை அருகே ராம ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்காதது எந்த வகையில் நியாயம்? என்றும்  ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது  என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்