கொரோனாவால் தமிழகத்தில் 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்!

Published by
Rebekal
  • கொரோனாவால் தமிழகத்தில் 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.
  • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவில் பரவி வருவதுடன், உயிரிழப்புகளையும் அதிகளவு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் அதிகளவிலான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது போல தமிழகத்திலும் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் இதுவரை 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழந்தைகளில் பலர் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளதாகவும், சிலர் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்து உள்ள குழந்தைகளுக்கு 5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மூன்று லட்சமும் வைப்புத் தொகையாக வங்கிகளில் வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago