Tunnel closure [File Image]
மிக்ஜாம் புயலாக (Michaung Cyclone) வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை நேற்று முதல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலை சென்னையில் கனமழை காரணமாக 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சைதாப்பேட்டை-அரங்கநாதன் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லைநகர், சி.பி.சாலை, வில்லிவாக்கம், வியாசர்பாடி, செம்பியம், கணேசபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் இந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்ட்ரல்- மைசூர் சதாப்தி ரயில், சென்ட்ரல் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள், பெங்களூர் பிருந்தாவன் ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதோடு ரத்து செய்யப்பட்ட ரயிலில் பயணம் செய்ய டிக்கெட்களை பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அவர்களது கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…