யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமை – கோவை ஆட்சியர் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதும் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2323 ஆக உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு இதுவரை 906 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், பாதிப்பு குறைவான பகுதிகளில் மட்டும் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்படும் என்று மருத்துவ நிபுணர் குழு, முதல்வரிடம் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. இதனிடையே ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அறிவிப்புக்களை அறிவித்து வருகிறார்கள். அதுபோன்று திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியே செல்லும் போது குடையை எடுத்து செல்ல வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் வலுயுறுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அறிவித்துள்ளார். இதனிடையே கோவையில் இதுவரை 141 பாதிக்கப்பட்டதில், 125 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் 7 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

3 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

23 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

23 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

35 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

1 hour ago