14 காளைகளை அடக்கிய இளங்காளை…சிறந்த மாடுபிடிவீரர் தேர்வு..!களத்தில் காளையர்களை மிரட்டிய காளை சுவாரஸ்ய தகவல்

Default Image
  • 14 காளைகளை அடக்கிய இளங்காளை ஜெயந்திபுரத்தை சேர்ந்த விஜய் தேர்வு
  • களத்தில் மிரட்டிய புதுக்கோட்டை அனுராதாவின் காளை சிறந்த காளையாகத் தேர்வு.

தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்  சிறந்த மாடுபிடி வீரராக  விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முன் சீறிப்பாய்ந்து வந்த14 காளைகளை அடக்கி அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.இந்நிலையில் சிறந்த  மாடுபிடி வீரர் விஜய்க்கு இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் களத்தில் காளையர்களை கிரங்கடித்து மிரட்டிய புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா என்பவரின் மாடு சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்