13 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் சான்றிதழ்!

Default Image

தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் 13 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு முதல்வர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படக் கூடிய சுகாதார சேவைகள் சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் கருத்துகள் பெறப்பட்டு, இந்த கருத்துக்கள் தேசிய குழு நிபுணர்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு பரிசு தொகையும் தேசிய சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி வருகிறது. இந்நிலையில் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் 2019 – 20 வரையான ஆண்டிற்கான சான்றிதழை தமிழகத்தில் 13 உள்ள மருத்துவமனைகள் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இருந்து காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தாம்பரம், ஆம்பூர், திருப்பத்தூர், சோளிங்கர், அரூர், திருச்செந்தூர், அருப்புக்கோட்டை, பரமகுடி, ஸ்ரீரங்கம் மேட்டுப்பாளையம், ராசிபுரம், ஓசூர் ஆகிய 13 தமிழக அரசு மருத்துவமனைகளும் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய தர சான்றிதழ் மற்றும் பரிசு தொகையாக 2.53 கோடி பணத்தையும் அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கியுள்ளார்.காலியாக உள்ள 138 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்