ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த துணை ஆணையர் விமலா உள்பட 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் துணை ஆணையராக இருந்த அரவிந்த், சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத், கன்னியாகுமரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், செங்கல்பட்டு எஸ்பியாகவும், சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குநர் ஜெயலட்சுமி, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் ரயில்வே ஐஜியாக இருந்த கல்பனா நாயக், மின்வாரிய பிரிவு விஜிலன்ஸ் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்ட்டுள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…