இன்னும் 2 நாட்களில் மேலும் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு ஏற்கனவே மே 9ம் தேதி 3 லட்சம் தடுப்பூசிகள் வந்த நிலையில், இன்னும் 2 நாட்களில் 11.4 லட்சம் கோவிஷீல்டு, 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 13 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது. தற்போது தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தில் விரைவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் தொடங்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.
தடுப்பூசிகளுக்கான கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும், உலகளாவிய அளவில் தடுப்பூசி வழங்களுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழக வரவுள்ளது.
இதனிடையே, மேற்கு வங்கம் துர்காபூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளை காலை அல்லது மதியம் சென்னை வந்தடையும் என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டையார்பேட்டை வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…