நாளை முதல் தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கவுள்ளது.
12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தமாக 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். கொரோனா வைரஸ் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை 48 லட்சம் விடைத்தாள்கள், 200 மையங்களில் திருத்தும் பணி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகமாக சென்னையில் தான் பாதித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள விடைத்தாள்கள் மற்ற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுப்படள்ளனர்.
ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதியில் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் இருந்து ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் தலைமை கண்காணிப்பாளர் 6 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். சமூக இடைவெளி , முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…