12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்.!

Default Image

நாளை முதல் தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கவுள்ளது.

12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம்  தேதி வரை நடைபெற்றது.  இந்த தேர்வில் மொத்தமாக 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். கொரோனா வைரஸ் காரணமாக  விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில்,  நாளை 48 லட்சம் விடைத்தாள்கள், 200 மையங்களில் திருத்தும் பணி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகமாக சென்னையில் தான் பாதித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள விடைத்தாள்கள் மற்ற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுப்படள்ளனர்.

ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதியில் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு,  கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் இருந்து ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் தலைமை கண்காணிப்பாளர் 6 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். சமூக இடைவெளி , முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்