திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கோவில் இணை ஆணையர் அம்ரித் தலைமை வகித்தார். உதவி ஆணையர் செல்வராஜ் , ரோஜோலி சுமதா , தக்கார் பிரதிநிதி பாலசுப்ரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் மோகன் ,வேலாண்டி , கருப்பன் ஆகியோர் இருந்தனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியலில் இருந்து ஒரு கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 321 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 538 ரூபாயும் இருந்தது.
மொத்தமாக ஒரு கோடியே 27 லட்சத்து 859 ரூபாய் வசூலானது.இதில் வெளிநாட்டு நோட்டுகள் 252 , தங்கம் 780 கிராம் , வெள்ளி 16 ஆயிரத்து 700 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…