திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கோவில் இணை ஆணையர் அம்ரித் தலைமை வகித்தார். உதவி ஆணையர் செல்வராஜ் , ரோஜோலி சுமதா , தக்கார் பிரதிநிதி பாலசுப்ரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் மோகன் ,வேலாண்டி , கருப்பன் ஆகியோர் இருந்தனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியலில் இருந்து ஒரு கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 321 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 538 ரூபாயும் இருந்தது.
மொத்தமாக ஒரு கோடியே 27 லட்சத்து 859 ரூபாய் வசூலானது.இதில் வெளிநாட்டு நோட்டுகள் 252 , தங்கம் 780 கிராம் , வெள்ளி 16 ஆயிரத்து 700 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…