கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள்.
பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்அலை வந்த பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 மருத்துவமனைகளில் ரூ.282.51 கோடி மதிப்பில் 27,806 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் இதர சுகாதார வசதிகள் ஏற்படுத்தும் பணிகள், பொதுப்பணித்துறையால் அவசரகால பணியாக மேற்கொள்ளப்பட்டது.
இதில் 21,692 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே இவ்வாண்டு கொரானா இரண்டாம்அலையை எதிர்கொள்ளவும், பொது மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிடவும் அனைத்து மருத்துவமனைகளிலும் 12,370 ஆக்சிஜன் இணைப்புகளுன் படுக்கை வசதிகள் அமைக்க அரசு அறிவுறுத்தலின் பேரில் பொதுப்பணித் துறையால் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு 2,912 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டது. இத்துடன் கூடுதலாக இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும். பணி நடைபெற்று வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை கூடுதல் ஆக்ஸிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500, அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூரில் 225, கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கிண்டியில் 200 மற்றும் சென்னையில் உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில் 1420 கூடுதல் ஆக்ஸிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதலாக 434 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், திருச்சி மாவட்டத்தில் 585, தஞ்சாவூர் மாவட்டத்தில் 583, கோயம்புத்துார் மாவட்டத்தில் 311, மதுரை மாவட்டத்தில் 225 மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 325 மற்றும் பிற மாவட்டங்களில் கூடுதலாக 7,012 ஆக்ஸிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆகியோர் நாள்தோறும் கலந்து ஆலோசித்து இரண்டாம்அலையை எதிர்கொள்ள மருத்துவத்துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பொதுப்பணித்துறை தீவிரமாகவும் துரிதமாகவும் செய்து வருகிறது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…