பகுதிநேரமாக குறைந்த சம்பளத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமால், மாத சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்பநல நிதி காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படாமல் வைத்திருப்பது மனிதநேயமற்ற நடவடிக்கையாகும்.
பகுதி நேரமாக இருந்தாலும் கூட ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகாவது தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் எனும் நம்பிக்கையில் தான் ஆசிரியர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். ஆனால் 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாத பல ஆசிரியர்கள் உள்ளனர். இவ்வாறு மாதம் வெறும் 7 ஆயிரத்து 700 ரூபாய் வருமானமாக வாங்கிக்கொண்டு வேலை செய்யக்கூடிய 12 ஆயிரம் ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என கே எஸ் அழகிரி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…