வெட்டப்படும் மரத்திற்கு தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டும்… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

Published by
Muthu Kumar

சென்னை எழும்பூர் ரயில்நிலைய விரிவாக்க பணிகளில், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக அதனைச் சுற்றியுள்ள மரங்கள் வெட்டப்படுவதாக பசுமை தாயகம் அமைப்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதன் விசாரணையில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகளை நடவேண்டும் என ரயில்வே துறைக்கு உத்தரவளித்துள்ளது.

பசுமை தாயகம் அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவில், 100 வருடங்களுக்கு மேலான மரங்களும் இந்த விரிவாக்க திட்டங்களுக்காக வெட்டப்பட இருக்கின்றன என குறிப்பிட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் தெற்கு ரயில்வே தரப்பில் அரசின் அனுமதி பெற்று மரங்கள் வெட்டப்படுவதாகவும், நிபந்தனைகளுக்குட்பட்டு விதிகள் பின்பற்றப்படும் எனவும் உறுதி அளித்தது.

இதன்படி 105 மரங்கள் வேரோடு இடம்பெயர்த்து இடமாற்றம் செய்யப்படுவதாகவும், 180 மரங்கள் வெட்டப்படுவதாகவும் நிபந்தனைகள் போடப்பட்டிருப்பதை விசாரித்த நீதிபதிகள், வெட்டப்படும் மரத்திற்கு பதிலாக 12 மரக்கன்றுகள் நடுவதற்கும் உத்தரவளித்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவதையும், வேறு இடத்திற்கு மாற்றப்படுவதையும் மாவட்ட பசுமைக்குழு கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டுள்ளது.

மேலும் விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என்றால் பசுமை தாயகம் அமைப்பு நீதிமன்றத்தை நாடவும் அனுமதி அளித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு வழக்கை முடித்து வைத்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

1 hour ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

2 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

11 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

13 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

14 hours ago