தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் :
1. தேவகோட்டை சப்-டிவிஷன் ஏஎஸ்பி இருந்து வந்த கிருஷ்ணராஜ் எஸ்.பி.யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு , சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக இருந்த ராஜசேகரன், சென்னை காவல் ஆணையரக தலைமையிடத்தின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. சென்னை காவல் ஆணையரகத் தலைமையிடத்தின் துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4 .சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜி -யாக இருந்த சாம்சன், உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த சுந்தரவடிவேல், திருப்பூர் காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு ஏஐஜி-யாக இருந்த ஸ்ரீதர்பாபு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக இருந்த சுதாகர், டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் , தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு, சென்னை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10. தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு சென்னை, எஸ்.பி.யாக இருந்த முத்தரசி, சிபிசிஐடி-2 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..
11. சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்ட வேலூர் எஸ்.பி. பிரவேஷ் குமார் தர்மபுரி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
12. தர்மபுரி எஸ்.பி. ராஜன், சென்னை ரயில்வே எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…