தண்ணீர் பாய்ச்ச சென்றபோது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.! அலறி அடித்து ஓடிய பெண்மணி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடிய பெண்மணி.
  • பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பி, விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி என்ற பெண்மணி. இவருக்கு 4 ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. எனினும் நிலத்தின் நடுவே மண்திட்டான பகுதியில் உள்ள பாறையின் நடுவே கடந்த 10 நாட்களுக்கு முன் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்மணி அவரது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த மலைப்பாம்பு மேல வந்ததால் அந்த பெண்மணி பார்த்துவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்மணி உறவினர்களிடம் கூறி, பின்னர் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்புடன் பிடித்து அருகிலுள்ள ஒன்னங்கரை காட்டு பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்கள் தங்களது விவசாய நிலத்திற்கு செல்வது பயத்தை உண்டாக்கியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

6 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

40 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

45 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago