11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் அடுத்துள்ள தனியார் பள்ளியில் ஷர்மிளா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாயமான நிலையில் மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், தனது மகன் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஆசிரியை சர்மிளா தொலைபேசி என்னை கொண்டு தேடிய காவல்துறை திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஆசிரியை சர்மிளா அவரது தோழியின் வீட்டில் இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
விசாரணையில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், காவல்துறை ஆசிரியை சர்மிளா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவன் திருச்சி உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ரூ.497.06 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.280.38…
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அந்த குற்றங்கள்…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2ஆம்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்துள்ள சமயத்தில் வெயிலின் தாக்கத்தை சற்று தணிக்கும் வகையில் தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில்…