ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்.
கொரோனா வைரசின் தாக்குதலால் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் விக்கிரபாண்டி எனும் 16 வயது மாணவன் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வந்துள்ளார்.
பாடங்கள் புரியவில்லை என பெற்றோரிடம் கூறியும் அவரது தந்தை படித்துதான் ஆக வேண்டும் என கண்டிப்புடன் கூறியதாகவும், இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவன் விக்ரபாண்டி யாரும் வீட்டில் இல்லாதபோது தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் உடனடியாக சேர்த்தாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் ஏற்கனவே ஒரு மாணவனும் இதுபோல ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…