ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்!

Published by
Rebekal

ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்.

கொரோனா வைரசின் தாக்குதலால் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் விக்கிரபாண்டி எனும் 16 வயது மாணவன் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வந்துள்ளார்.

பாடங்கள் புரியவில்லை என பெற்றோரிடம் கூறியும் அவரது தந்தை படித்துதான் ஆக வேண்டும் என கண்டிப்புடன் கூறியதாகவும், இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவன் விக்ரபாண்டி யாரும் வீட்டில் இல்லாதபோது தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் உடனடியாக சேர்த்தாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் ஏற்கனவே ஒரு மாணவனும் இதுபோல ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

1 minute ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

6 minutes ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

28 minutes ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

57 minutes ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

1 hour ago

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 hours ago