11 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் தீர்ப்பு அளிக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதுகுறித்து அவையிலே கேள்வி எழுப்பினோம்.18 எம்எல்ஏக்கள் சேர்ந்து முதலமைச்சரை மாற்றவேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்த நிலையில் சபாநாயகர் அந்த 18 பேரை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் ஆட்சியே நீடிக்கக்கூடாது என்று 11 எம்எல்ஏக்களும் எதிர்த்து வாக்களித்தார்கள் . 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் தீர்ப்பு அளிக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…