11 மீனவர்கள் சிறைபிடிப்பு.! மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்த இலங்கை கடற்படை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று( சனிக்கிழமை) மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னப்பாண்டி மற்றும் அவரது மகன் மணிகண்டன், அந்தோணி ஆகிய மூன்று பேரும் இந்திய கடல் பகுதியில் நெடுந்தீவு என்ற பகுதிக்கு அருகே மீன் பிடித்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்தாக கூறி அவர்களை படகுடன் கைது செய்தனர்.

இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை இரு படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடித்த மொத்தம் 11 பேரிடமும் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்திய கடல்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க! திருமாவளவன் ஸ்பீச்!

இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க! திருமாவளவன் ஸ்பீச்!

சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

36 minutes ago

வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…

1 hour ago

சுனிதாவை அழைத்துவரும் திட்டம் ஒத்திவைப்பு! கடைசி நேரத்தில் வந்த திடீர் சிக்கல்?

வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…

2 hours ago

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…

2 hours ago

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

12 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

13 hours ago