சென்னை துறைமுகத்தில் ரூ.100 கோடி வைப்பு நிதியில் முறைகேடு – 11 பேர் கைது

Default Image

சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி செய்ததாக பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை கைது செய்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ.100 கோடியை சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்தது.

டெபாசிட் செய்யப்பட்ட ரூ.100 கோடியை பலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ.100 கோடி வைப்பு நிதியை இரண்டு ரூ.50 கோடியாக நடப்புக் கணக்கில் மாற்றி மோசடி செய்ததாக பதிவான புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, சிபிஐ 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்