பத்தாம் வகுப்பு மாணவிகள் செய்த செயல்!அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்!

Published by
Sulai
  • பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் செய்த செயல்.அதிர்ச்சியில் உறைந்த மாணவிகளின் பெற்றோர்.விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்.
  • மாணவிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

சென்னை ஆவடியில் உள்ள காமராஜ் பெண்கள் மேல்நிலைபள்ளியை சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு 4 மாணவிகள் ஆவர்.இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.

ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் மாணவிகள் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.

பின்னர் இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆவடி காவல்துறையினர் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன் காரணமாக மாணவிகள் குறித்து சென்னை மாநகர அனைத்து காவல்நிலையங்களிலும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன அனைத்து மாணவிகளும் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து மாணவிகளின் பெற்றோருடன் காவல்துறையினர் பெங்களூரு விரைந்தனர்.

பின்னர் பெங்களூரு ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த நான்கு மாணவிகளை அங்கிருக்கும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.பிறகு அங்கு சென்ற தமிழக காவல்துறையினரும் பெற்றோரும் மாணவிகளை மீட்டு வந்துள்ளனர்.

அந்த 4 மாணவிகளிடம் காவல்துறைனையினர் எதற்காக பெங்களூரு சென்றீர்கள்? என விசாரணை நடத்தியுள்ளனர்.அதற்கு செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கொண்டிருந்ததால் பெற்றோரும் ஆசிரியரும் கண்டித்ததாக கூறியுள்ளனர்.

இதனால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாத எண்ணத்தில் பெங்களூரு சென்றதாக கூறியுள்ளனர்.இந்நிலையில் காவல்துறையினர் மாணவிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago