பத்தாம் வகுப்பு மாணவிகள் செய்த செயல்!அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்!

Published by
Sulai
  • பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் செய்த செயல்.அதிர்ச்சியில் உறைந்த மாணவிகளின் பெற்றோர்.விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்.
  • மாணவிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

சென்னை ஆவடியில் உள்ள காமராஜ் பெண்கள் மேல்நிலைபள்ளியை சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு 4 மாணவிகள் ஆவர்.இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.

ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் மாணவிகள் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.

பின்னர் இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆவடி காவல்துறையினர் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன் காரணமாக மாணவிகள் குறித்து சென்னை மாநகர அனைத்து காவல்நிலையங்களிலும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன அனைத்து மாணவிகளும் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து மாணவிகளின் பெற்றோருடன் காவல்துறையினர் பெங்களூரு விரைந்தனர்.

பின்னர் பெங்களூரு ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த நான்கு மாணவிகளை அங்கிருக்கும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.பிறகு அங்கு சென்ற தமிழக காவல்துறையினரும் பெற்றோரும் மாணவிகளை மீட்டு வந்துள்ளனர்.

அந்த 4 மாணவிகளிடம் காவல்துறைனையினர் எதற்காக பெங்களூரு சென்றீர்கள்? என விசாரணை நடத்தியுள்ளனர்.அதற்கு செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கொண்டிருந்ததால் பெற்றோரும் ஆசிரியரும் கண்டித்ததாக கூறியுள்ளனர்.

இதனால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாத எண்ணத்தில் பெங்களூரு சென்றதாக கூறியுள்ளனர்.இந்நிலையில் காவல்துறையினர் மாணவிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

29 minutes ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

1 hour ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

3 hours ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

4 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

5 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

5 hours ago