புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

Default Image

புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், 10-ம் வகுப்பு  மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதனைதொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்