10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் முதல்., ரிசல்ட் தேதி வரை.., அன்பில் மகேஷ் அறிவிப்பு.! 

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் முடிவுகள் வெளியாகும் நாள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

Public Examination dates are released by Minister Anbil Mahesh

சென்னை : தமிழகத்தில் 10,11,12ஆகிய வகுப்பு பள்ளிமாணவர்களுக்கு 2024-2025 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அட்டவணை விவரங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, ” 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 14, 2025-ல் முடிவடையும். 12ஆம் வகுப்புக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 3, 2025இல் தொடங்கி மார்ச் 25, 2025இல் முடிவடையும். இதற்கான முடிவுகள் 09.05.2025இல் வெளியிடப்படும்.

அடுத்து, 11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 21, 2025-ல் முடிவடையும். 11ஆம் வகுப்புக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 5, 2025இல் தொடங்கி மார்ச் 27, 2025இல் முடிவடையும். இதற்கான முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும்.

10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 28, 2025-ல் முடிவடையும். 10ஆம் வகுப்புக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 28, 2025இல் தொடங்கி ஏப்ரல் 15, 2025இல் முடிவடையும். இதற்கான முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும். ” என அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்