தமிழகத்தில் காலியாக 10,906 காவலர் பணியிடங்கள்.! ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை சம்பளம்.! முழுவிவரம் உள்ளே.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதற்கான தகுதி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும், பணியிடங்களுக்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரங்கள் :

  • ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு 3,784 பேர் தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் ஆண்கள் 685, பெண்கள் 3,099 பேர் தேர்வு செய்யப்படுவர். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட மொத்தம் 3,784 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.
  • தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கும் 6,545 பேர் தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் ஆண்கள் மட்டும் 6,545 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  • இரண்டாம் நிலை சிறைக் காவலர் பதவிக்கு 119 பேர் தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் ஆண்கள் 107 பேர், பெண்கள் 12 பேர் என மொத்தம் 119 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை பணியிடத்துக்கு 458 பேர் தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் ஆண்கள் மட்டுமே 458 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  • இதுதவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள்( ஆயுதப்படை 62 பெண்கள், சிறைத்துறை 10 பெண்கள் தேர்வு செய்யப்படுவர்.

கல்வி தகுதி : அனைத்துப் பதவிகளுக்கும் இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி ஆகும். மொழிப்பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து 2 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், 10-ம் வகுப்புக்கு மேல் படித்துள்ள யாரும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பள விகிதம் : ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01-07-2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும், 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 01-07-2002 அன்று அல்லது அதற்குமுன் பிறந்தவராகவோ 01-07-1996 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவராகவோ இருக்க வேண்டும். இதையடுத்து, சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு அறிவிக்கப்பட்டள்ளது.

அதாவது, ஜெனரல் கோட்டா வயது வரம்பு 18-24 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26, பட்டியலினத்தவர் 18-29, மூன்றாம் பாலினத்தவர் 18-29, ஆதரவற்ற விதவைப் பெண்கள் 18-35, முன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 26ம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணைக்கல்வித் தகுதிக்கானச் சான்றிதழ் (equivalent certificate) விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும். அவ்விதம் பதிவேற்றம் செய்யத் தவறினால் உரிய கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ள இயலாது.

விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள  https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

48 minutes ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

1 hour ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

2 hours ago

முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

3 hours ago

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…

3 hours ago

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

4 hours ago