தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.109.3 கோடிக்கு மது விற்பனை.!

Published by
Dinasuvadu desk

நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.109.3 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  மதுக்கடைகளை உயர் நீதிமன்றம் விதித்த விதி முறைகளை கடைப் பிடிக்கவில்லை என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு தடை விதித்தது.

இதனால், கடந்த சனிக்கிழமை மீண்டும்தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.109.3 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

மதுரையில்  ரூ.28.6 கோடி, திருச்சியில் ரூ.26.4 கோடி, சேலத்தில் ரூ.24.3 கோடி, கோவையில் ரூ.22.5 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.6.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

 

 

Published by
Dinasuvadu desk
Tags: #Tasmac

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago