108 வர தாமதமானதால் பரிதாபமாக போன உயிர் – போராட்டத்தில் ஈடுபட்ட கிராம வாசிகள்!

Published by
Rebekal
புதுக்கோட்டையில் 108 வர தாமதமானதால் விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ள ரெங்கம்மாள் சத்திரம் எனும் கிராமத்தில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பால்ராஜ் என்பவரை மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் விபத்தில் படுகாயமடைந்த பால்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் துடிதுடித்து கிடந்துள்ளார், இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 108 க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் மரங்களை போட்டு புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு தாமதமாக விபத்து நடந்த இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களையும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்”… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!

“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்”… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!

இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…

9 minutes ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…

1 hour ago

மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…

3 hours ago

LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!

சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…

4 hours ago

விடாமுயற்சியின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? இதுக்கு துணிவு எவ்வளவோ மேல்…

சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…

4 hours ago

‘எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது’ – சேவாக் ஓபன் டாக்.!

டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

5 hours ago