புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ள ரெங்கம்மாள் சத்திரம் எனும் கிராமத்தில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பால்ராஜ் என்பவரை மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் விபத்தில் படுகாயமடைந்த பால்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் துடிதுடித்து கிடந்துள்ளார், இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 108 க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் மரங்களை போட்டு புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு தாமதமாக விபத்து நடந்த இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களையும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…