நவீன வசதிகளுடன் தனது சேவையை துடங்கியது 108…

Default Image

வென்டிலேட்டர்’ உள்ளிட்ட  அதிநவீன அவசர சிகிச்சை கருவி வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி  வாகனங்கள், நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.

நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற வசதியாக, நவீன வசதிகளுடன் கூடிய அவசரஊர்தி  வாகனங்களை, தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தில் ‘வென்டிலேட்டர்’, ஆக்ஸிஜன் சிலிண்டர், இருதய இயக்கத்தை துாண்டும் நவீன கருவி, உயிர்காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கி உயிர்காக்கும் கருவி, கூடுதல் மருத்துவ வசதியுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்துக்கு, இரண்டு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆட்சியர்  விஜய கார்த்திகேயன், இரு ஆம்புலன்ஸ்களையும், மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். முன்னதாக, அவர், கூடுதல் மருத்துவ வசதிகள் குறித்து, வாகனத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ‘டீன்’ வள்ளி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி, 108 ஆம்புலன்ஸ் இயக்கும் நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay o panneerselvam
ops -sengottaiyen
udhayanidhi stalin and kamal haasan
Anil kumble - Rahul dravid - Virat kohli - Rajat Patidar
ben duckett Kevin Pietersen
Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan