108 புதிய அறிவிப்புகள் சுகாரத்துறையில் வெளியீடு! அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
Venu

தமிழ்நாடு சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், நான்காண்டுகால மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலன் கருதி, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்எல்ஏ செந்தில்குமார், மகப்பேற்றின் போது, கர்ப்பிணிகள் இறப்புத் தொடர்பான எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கும்பகோணம் ஆகிய நகரங்களில், 28 புள்ளி 3 கோடி ரூபாய் செலவில், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார். அதிக சாலை விபத்துகள் நிகழும் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், சூளகிரி ஆகிய இடங்களில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.  காசநோயாளிகள் சிகிச்சை காலம் முழுவதும் மாத்திரை உட்கொள்வதை கண்காணிக்க, “99 Dots Sleeves” என்ற செயலி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உணவில் கலப்படம் இருப்பதை கண்டறிய மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், நான்காண்டுகால மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என்றும், மருத்துவக் கல்வி மாணவர்களின் சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலன் கருதி, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை செய்யப்படும் என்பன உள்ளிட்ட 108 அறிவிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago