நெல்லையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

Published by
மணிகண்டன்

தமிழ்நாட்டில் நேற்று 1604 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள். இன்று திருநெல்வேலியில் 107 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போது பரவி  வரும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்க தமிழகஅரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், ‘ இன்று திருநெல்வேலியில் மொத்தமாக 107 காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 1604 முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

3 பேருக்கு மேல் ஒரு பகுதியில் காய்ச்சல் இருந்தால் அந்த பகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல் மட்டுமே.

தமிழகத்தில், எச்1என்1 வைரஸால் பாதிக்கப்பட்டோர்  442பேர். அவர்களில் 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் வீடுகளில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கின்றார்.

இந்த காய்ச்சல் வந்தால் 3 முதல் 5 நாட்கள் வீட்டில் இருந்தாலே போதுமானது. இருமல் , தும்மல் ஆகியவற்றால் பரவும் என்பதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஜனவரி முதல் நெ 6 பேருக்கு எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்துள்ளது.

நாங்குநேரி சாலையில் 10கோடி செலவில், பிரதான சாலையில் சாலை விபத்துக்கான சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு முதற்கட்டமாக இடம் பார்க்கப்பட்டுள்ளது’ என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகல் இருக்கிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழகத்தில் இருக்கிறது. முதலில் மத்திய அரசு கவுன்சிலிங் முடிந்ததும். மாநில அரசுக்கான கவுன்சலிங் ஆரம்பிக்கப்படும்.’ எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

10 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

11 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago