கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் நபருக்கு 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதிலும் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுவையில் தினமும் 3000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதுச்சேரி அரசும் கையாண்டு வருகிறது.
இந்நிலையில், வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லவேண்டும். கையுறைகள் பயன்படுத்த வேண்டும், சுகாதாரமாக இருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனை மீறி நோய்த்தொற்று பரவுவதற்கு காரணமாக இருக்கக் கூடியவர்கள் மீது 2020 பிரிவு 4 ஏ இன் கீழ் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் என அபராதம் வசூலிக்க தற்போது சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி விதிகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தனிமையிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் இந்த விதிமுறைகளை மீறும் பொழுது ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் எனவும், புதுவை மாவட்ட கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார்.
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…