வெள்ள அபாய எச்சரிக்கை.! செம்பரம்பாக்கம் ஏரியில் 3 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு.!

Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக இன்று மாலை 3 மணி முதல் திறக்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை சுற்றியுள்ள மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1510 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வரும் வேளையில், மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால்,

இன்று மாலை 3 மணியில் இருந்து நீர் வெளியேறும் அளவு 500 கனஅடியில் இருந்து 1000  கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரையோர கிராமங்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்