தென்காசியில் 100 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்!

Default Image

தென்காசியில் 100 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த 100 வயதான இசக்கியம்மாள் என்னும் மூதாட்டி கடும் மூச்சுத் திணறல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுத்த சளி மாதிரியில் கொரோனா நோய்த்தொற்றுகள் இருப்பது காணப்படவில்லை. ஆனால் மூச்சுத்திணறல் தீவிரமாக இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது, அதில் அவர் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து கடந்த 6 நாட்களாக கொரோனா நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இசக்கியம்மாள் அதன் பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் இசக்கியம்மாளை வாழ்த்தி வீட்டிற்கு வழி அனுப்பு உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்