திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை – அச்சம் இருந்தால் வர வேண்டாம்!

Published by
Rebekal

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்த பின்பும் வருவதற்கு அச்சமாக இருந்தால் திரையரங்குகளுக்கு வரவேண்டாம் என நடிகை குஷ்பு ட்விட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவ்வப்போது சில தளர்வுகளையும் கொடுத்து வருகிறது. தற்பொழுது பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இடைக்கால அறிவிப்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக முதல்வர் அனுமதி கொடுத்ததற்காக மிகப்பெரிய நன்றி எனவும், அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கக்கூடிய துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும்; நல்ல பொழுதுபோக்கை மீண்டும் தரும் எனவும் கூறியுள்ளார். பாதுகாப்பு குறித்து கவலைப்படுவோருக்கு, ஒரு சில இடங்களைத் தவிர எங்கும் திரையரங்குகளில் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதே சமயம் திரையரங்குகளும் விதிமுறைகளை பின்பற்றும், திரையரங்குகளுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு அதை பின்பற்றுவோம் எனவும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்குவது குறித்து வேறு அபிப்ராயங்கள் மற்றும் அச்சம் கொண்டவர்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான். அச்சம் இருந்தால் போகாதீர்கள், உங்களை அச்சத்தை புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள் எனவும், நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் புதிய தோற்றத்தினை விசிலடித்து வெடி வெடித்து காண காத்திருக்கிறேன் எனவும், ஈஸ்வரனின் சிலம்பரசனை காண காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

23 minutes ago

பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…

31 minutes ago

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

2 hours ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

2 hours ago

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

2 hours ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

3 hours ago