திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விதித்துள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இறக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் திரையரங்கில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை ரத்து செய்தது.
மேலும், அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், உயர்நீதிமன்றம் கூறியபடி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விதிகளை மீறியதாகவும், அனுமதி வழங்கியதை வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…