தனியார் விடுதியில் உணவு உட்கொண்ட 100 பேருக்கு உடல்நலக்குறைவு..!

Default Image

தனியார் விடுதியில் உணவு உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் கொரட்டூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரி தற்போது செயல்படாத நிலையில், விடுதியாக செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் தங்கி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் விடுதியில் உணவு உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அங்கு கொடுக்கப்பட்ட உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்