தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் ரூ.100 அபராதம் -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Default Image

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1258 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், நேற்று மட்டும் 138 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததால் கொரோனா பரவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில்,தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று  சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்