கொரோனாவை தவிர வேறு எந்தநோய் இல்லாமல் 10 பேர் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,276  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.மேலும் , தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் வேறு ஏதும் நோய் இல்லாமல் 10 பேர் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் இப்போது வரை எந்தவித அறிகுறியும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்