10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிலை கடத்தல் மன்னன் கைது..!

Published by
Dinasuvadu desk

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் ஞானஅன்புசுவாமிதாஸ். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சிவகாமி அம்மன், சிவன்-பார்வதி உலோக சிலைகள் அவருடைய விவசாய நிலத்தை தோண்டும்போது கிடைத்தன.

இதுகுறித்து அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த பிரிவின் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் விவசாய நிலத்தில் கிடைத்த 3 சிலைகளையும் கைப்பற்றினர்.

அவர்கள் அதனை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளிடம் ரூ. 15 லட்சத்துக்கு விற்றதாக தெரிகிறது. இந்த 3 சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 9 கோடியாகும்.

இதனை சிலை கடத்தல் கும்பல் வெளிநாட்டில் விற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையை தொடர்ந்து, டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றிருந்த காதர்பாட்சா மற்றும் சுப்புராஜை போலீசார் கைது செய்தனர்.

சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மதுரை மாவட்டம் தாட்கோ காலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 33) என்பவர் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் 10 ஆண்டுகளாக அவர் போலீசாரிடம் சிக்காமல் போக்குகாட்டி வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பாண்டி மதுரையில் இருப்பதாக சிலை கடத்தல் போலீசாருக்கு 2 நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மதுரையில் முகாமிட்ட போலீசார் நேற்று முத்துப்பாண்டியை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை வருகிற 9-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

16 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

35 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

50 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

3 hours ago