மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது- சு.வெங்கடேசன்!

Default Image

மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் மக்களவையின் உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள  அறிவிப்பில், பிரதம மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில், கடந்தஓரடண்டில் 2019-2020 மட்டும் 40 பேருக்கு மருத்துவ நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிதிக்காக கோரிய 74 பேரில் 40 பேருக்கு இதுவரை கிடைத்துள்ளதாகவும், இன்னும் 34 பேருக்கு வரவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நிதி உதவி பெற்றவர்களில் 36 பேர் புற்றுநோயாளிகள் எனவும் 4 பேர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்