கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ,வெளியில் இருந்து 1.5 கோடி முகக்கவசங்களும் , N95 முகக்கவசங்கள் 25 லட்சமும் , அதேபோல பாதுகாப்பு கவசம் 11 லட்சம் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் புதியதாக 2500 வாங்கவும் , டெஸ்ட் கிட் 30,000 வாங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த 11 குழுக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கு ஒவ்வொரு வேலையை வரையறு செய்து கொடுத்துள்ளோம்.அந்த பணியை அந்த துறையை சார்ந்த அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக கொரோனா நோய் தடுப்பு பணி வேகமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன.தமிழகத்தில் 14 ஆய்வு கூடங்கள் உள்ளன.மத்திய அரசிடம் மேலும் 3 ஆய்வு கூடங்கள் செய்யப்பட மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.அந்த அனுமதி விரைவில் வந்துவிடும் அது வந்தால் தமிழகத்தில் 17 ஆய்வு கூடங்களாக மாறிவிடும் என கூறினார்.
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…