குழந்தையை மீட்கும் நவீன கருவி ! கண்டுபிடிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

Default Image

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் பரிசு வழங்கப்படும் என்று  தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது .ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகவே சிறுவனின் உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியதாக தெரிவிக்கப்பட்டது.இதனையயடுத்து குழந்தை சுஜித்  உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது .இறுதியாக சுஜித்  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் சிறுவனை உயிருடன் மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவைகள் தோல்வியில் தான் முடிந்தது.இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை  செயலாளர் சந்தோஷ் பாபு தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை  கண்டுபிடிக்கும் தனி நபர் / நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கலாம் என்ற பரிந்துரையை முதல்-அமைச்சரின் அலுவலகத்திற்கு  அனுப்பி உள்ளேன் என்று  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer
prison break rashid khan
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal