ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
அதிகரித்து வரும் சாலை விபத்து மரணங்களை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயநீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் டிராபிக் ராமசாமி ஹெல்மெட் அணியாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்றது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் பதில்தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…