ஹெச் .ராஜா மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம் அல்லது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கலாம்!அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ,பெண்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின்  நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவோ பேசக்கூடாது என, ஹெச் ராஜாவின் ட்வீட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரலில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,“மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டு, நிறைய முன்மாதிரியான திட்டங்களை நிறைவேற்றி அதிக வளர்ச்சியை எட்டிய மாநிலம் தமிழகம். 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் படி அல்லாமல், 2011-ம் ஆண்டின்படி வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்படும் என 15-வது நிதிக்குழு முடிவெடுத்துள்ளது, தமிழ்நாடு அடைந்த வளர்ச்சிக்கு தண்டனை கொடுப்பது போன்று உள்ளது.

தமிழகத்திற்கு மத்திய நிதி தொகுப்பிலிருந்து 38% வழங்கப்பட்டபோது, வரி வருவாய் குறைந்தாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது 42 சதவீதமாக உயர்த்தினாலும் மாநிலத்திற்கு நிதி குறைந்துள்ளது.

இது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கின்ற செயலாக இருக்கின்றது. இதனை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் இந்த முடிவை மாற்ற மத்திய அரசுக்கு நெருக்கடி தருவோம்.

அதனால்தான் முதல்வர் மூத்த அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி இதுதொடர்பாக நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் நிதிக்குழு தலைவரை சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதிக்குழு தலைவரை சந்தித்து இதுகுறித்து அழுத்தம் கொடுக்க தமிழக நிதியமைச்சர் டெல்லி சென்றுள்ளார். நிதி தன்னாட்சியை பேணி பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி குற்றவாளிகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். பேராசிரியை நிர்மலா தேவியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதுகுறித்து புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் எந்த கட்சியில் இருந்தாலும், அவர்களின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ பேசக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையில் புகார் அளிக்கலாம், அல்லது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கலாம்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

18 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

21 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

26 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

46 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

46 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

59 mins ago